அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு .
கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் ரெனின் .
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் .
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. .
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் .
ஆதிபகவன் , வாலறிவன், மலர்மிசை ஏகினான் , வேண்டுதல் வேண்டாமை இலான்,
இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான் , தனக்குவமை இல்லாதான் , அறவாழி அந்தணன் எண்குணத்தான் , இவைதான் கடவுள் குறித்து வள்ளுவர் காட்டும் குணங்கள். பெயர் இட்டு அழைப்பதை வள்ளுவர் தவிர்த்தார் என்றே கொள்ள வேண்டும். நாமும் தவிர்ப்போம்.
கடவுளை மதங்களின் பிடியில் இருந்து விடுவிப்போம்.